டெல்லி

ரும் செப்டம்பர் 3 ஆம் தேதி காலியாக உள்ள் 12 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், சர்பானந்தா சோனோவால், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த 10 பேர் போட்டியிட்டு வென்றனர். மேலும் தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில் 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

எனவே அசாம், மத்திய பிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் 12 மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளன. இவ்வாறு காலியாக உள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கு வருகிற செப்டம்பர் 3-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 14-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி நிறைவடையும் என்றும் வேட்புமனு பரிசீலனை 22-ந்தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  செட்பம்பர் 3 அன்று 12 மாநிலங்களவை தொகுதிக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்தப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.