டெல்லி

ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஹேமந்த் சோரனுக்கு வழங்கிய ஜாமீனை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேலமுறையீடு செய்துள்ளது.

கடந்த ஜனவரி 31 ஆம் தேதி ஜார்கண்ட் முதல்வரும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவருமான ஹேமந்த் சோரன் நிலமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததால் அவரது அரசில் அமைச்சராக இருந்த சம்பாய் சோரன், புதிய முதல்வரானார்.

ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் கடந்த ஜூன் 28 ஆம் தேதி ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கியதையடுத்து அவர் சிறையில் இருந்து விடுதலையானார். அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்க கட்சியினரும், கூட்டணி தலைவர்களும் விரும்பியதா முதல்வர் பதவியில் இருந்து சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கடந்த 4 ஆம் தேதி ஜார்கண்டின் 13-வது முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் பதவியேற்றார். தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்கும் நோக்கில் நேற்று முன் தினம் சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்து இந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடந்தது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதாதளம் உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களும், நியமன உறுப்பினர் ஒருவரும் அரசுக்கு ஆதரவாக வாக்களித்து அவரது அரசு வெற்றி பெற்றது.

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கும் முன் அனைத்து அம்சங்களையும் ஐகோர்ட்டு ஆராயவில்லை. என்பதால் வருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.