டோக்கியோ
டோக்கியோ நகரில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோ நகரில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 என பதிவாகி உள்ளது.
டோக்கியோவுக்கு கிழக்கே அமைந்துள்ள சிபா மாகாணத்தில் 80 கிமீ ஆழத்தில் இந்த நில நடுக்கம் மையம் கொண்டிருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் குலுங்கியதால் அச்சமடைந்த பொது மக்கள் வீட்டை விட்டு வெளியேறி தெருக்களுக்கு வந்துள்ளனர்.
இதில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஆபத்து இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel