கொல்கத்தா
இன்று வங்கக் கடலில் அடுத்தடுத்து இரு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது/

இன்று காலை 11.12 மணியளவில் (இந்திய நேரப்படி) வங்கக்கடலில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
சுமார் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 6.95 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 92.41 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என தீர்மானிக்கப்பட்டது.
இன்று பிற்பகல் 3.32 மணியளவில் வங்கக்கடலில் இரண்டாவது முறையாக 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
சுமார் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 7.21 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 92.36 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என தீர்மானிக்கப்பட்டது.
இதுவரை இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.