புதுச்சேரி

புதுச்சேரியின் சில பகுதிகளில் விக்கிரவாண்டி தேர்தலுக்காக மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வான தி.மு.க.வை சேர்ந்த நா. புகழேந்தி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். எனவே விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அங்கு நாளை  (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற்று வருகிற 13-ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.\ விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியின் சில பகுதிகளில் மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பகுதிக்கு உட்பட்ட மதுபான கடைகள்  3 நாட்கள் மூடப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை நாளான 13-ம் தேதியும் மதுக்கடைகளை மூட புதுச்சேரி கலால்துறை உத்தரவிட்டுள்ளது.