நேபிடா

மியான்மர் அதிபரின் உடல்நலக்குறைவு காரணமாக அவருடைய அதிகாரங்கள் அந்நாட்டு பிரதமருக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளன.

தற்போது மியான்மர் அதிபர் மைன்ட் ஸ்வே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

எனவே அவரது அதிகாரங்கள் அனைத்தும் தற்காலிகமாக மியான்மர் பிரதமரும், தேசிய நிர்வாக கவுன்சில் தலைவருமான மின் ஆங் ஹ்லைங்குக்கு மாற்றப்பட்டு உள்ளன.

மியான்மர் அதிபர் மைன்ட் ஸ்வே சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் வரை மின் ஆங் தற்காலிக அதிபராக செயல்படுவார் எனவும், அவர் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சில் தொடர்பான பணிகளை கவனிப்பார் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.