மும்பை
கனமழை காரணமாக மும்பை மற்றும் புனே நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தற்போது மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. எனவே வரும் 12 ஆம் தேதி வரை மும்பையின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மும்பையில் கனமழை பதிவான சூழலில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டு சில ரயில்கள் திருப்பி விடப்பட்டன. விமான நிலையத்திலும் மழையால் நீர் தேங்கி விமான சேவை பாதிக்கப்பட்டது. பள்ளிகள் மூடப்பட்டதுடன், தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.
மகாராஷ்டிராவில் மும்பை, ராய்காட், ரத்னகிரி சிந்துதுர்க் புனே மற்றும் சதாரா நகரங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Patrikai.com official YouTube Channel