நியூயார்க்:

மெரிக்காவில் பெண் விமானி ஒருவர், சக ஆண் விமானியால் பாலியல் வன்புணர்வுக்கு  ஆளாகியிருக்கிறார்.

கடந்த வருடம்  ஜூன் மாதம் அலாஸ்கா விமான நிறுவனத்திற்காக  பெட்டி பீனா என்ற பெண் விமானி ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருடன் மூத்த ஆண் விமானி ஒருவரும் பணியமர்த்தப்பட்டார்.

இந்த நிலையில் விமான பயணத்தின் போது பீனாவிற்கு அந்த சக விமானி மது அளித்துள்ளார்.    மதுவுடன் நிறைய மயக்க மருந்தும் கலந்து கொடுத்திருக்கிறார்.

இதனால் விமானம் ஓட்டும் போதே அந்த பெண் விமானி பெட்டி பீனா  மயங்கி விழுந்துவிட்டார். விமானத்தை தரையிறக்கிய பின் அந்த ஆண் விமானி, பீனாவை தன் அறைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். மேலும், உடலில் காயங்கள் ஏற்படுத்தி கொடுமை படுத்தியிருக்கிறார்.

பெட்டி பீனாவுக்கு நினைவு தெரிந்த பின்பே தனக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்ததை அறிந்தார்.

இது குறித்து விமான நிறுவன உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து   அந்த விமான நிறுவனத்திற்கு எதிராக பீனா வழக்கு தொடுத்துள்ளார்.

தனக்கு முன்பே வேறு பல பெண் விமானிகள் இப்படி பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்றும் அந்த பெண்களின் வாக்குமூலம் தன்னிடம் இருப்பதாகவும் பீனா தெரிவித்துள்ளார்.