டொமினிக்கன் ரிபப்ளிக் இரவு விடுதி மேற்கூரை இடித்து விழுந்து பலியான 221 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

டொமினிக்கன் தலைநகர் சாண்டோ டொமிங்கோ-வில் உள்ள புகழ்பெற்ற இரவு விடுதியில் செவ்வாயன்று நடைபெற்ற மெரெங்கு இசை நிகழ்ச்சியில் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதனால் அந்த அரங்கில் கூட்டம் அலைமோதியது, அப்போது திடீரென அந்த அரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் நூற்றுக்கணக்கானோர் அதில் சிக்கினர்.

இதில் பலியான 221 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த தேடுதல் நிறைவடைந்த நிலையில், மீட்கப்பட்டவர்களின் உடலை ஒரே இடத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.