சென்னை: வீடுகள், நிறுவனங்கள் முன்பு, அரசின் அனுமதியின்றி  ‘NO PARKING’ பலகைகளை  வைக்க கூடாது  என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் வீடுகளின் முன்பாக அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள ‘நோ-பார்க்கிங்’ போர்டுகளை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில், மாநகராட்சி மற்றும் போக்குவரத்து போலீஸார் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வீடுகளின் முன்பு அனுமதியின்றி நோ பார்க்கிங் போர்டு வைத்திருப்பவர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதுடன், இதுகுறித்த விதிமுறைகளை பத்திரிகை, ஊடகம் மற்றும் இணையதளம் மூலம் விளம்பர படுத்தவும் காவல்துறைக்கு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து,  சென்னை மாநகர காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதில்,   சென்னையில் இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில், எந்தவொரு தனிநபரோ, குடியிருப்பு சங்கமோ (அ) வணிக நிறுவனமோ, ‘NO PARKNG’ என்ற பலகைகள் அல்லது தடுப்புகளை முன் அனுமதியின்றி வைக்க கூடாது என்று   அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை, குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்கள் “நோ பார்க்கிங்” சைன்போர்டுகள், மண் பைகள், தடுப்புகளை வைப்பது அதிகரித்து வருவதை கண்டறிந்துள்ளது மற்றும் முறையான அங்கீகாரம் இல்லாமல் பொது சாலைகளில் மற்ற தடைகள் இந்த நடைமுறையால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதுடன்,

பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு தேவையற்ற இடையூறு ஏற்படுகிறது. சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் முன் அனுமதியின்றி. “நோ பார்க்கிக் பலகைகள், தடுப்புகள் அல்லது இதுபோன்ற தடைகளை பொதுச் சாலைகளில் வைக்க எந்தவொரு தனிநபருக்கோ, குடியிருப்பு சங்கங்களுக்கோ அல்லது வணிக நிறுவனங்களுக்கோ அனுமதி இல்லை என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

சாலையோரம் மற்றும் பொது இடங்களில் தனியார் வாகன நிறுத்தம் அல்லது பிற நோக்கங்களுக்காக அனுமதியின்றி ஆக்கிரமிப்பது சட்டவிரோதமானது. மோட்டார் வாகனச் சட்டம் 1988ன் பிரிவு 116ன் படி, போக்குவரத்துப் பலகைகளை அமைக்க அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அனுமதியின்றி பலகைகள் அல்லது பொருட்களை வைத்து, பொதுச் சாலைகளுக்கு இடையூறாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்கள்:-

அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவது குறித்து பொதுமக்கள் 103 அல்லது 100 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். விதி மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

அங்கீகரிக்கப்படாத இடங்களில் நோ பார்க்கிங் பலகைகள், தடுப்புகள் மற்றும் பிற இடையூறுகளை வைத்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங் கள் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்.

பொதுமக்கள் தங்கள் வாகனங்களை சாலைகளில் சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் நிறுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வாகன நிறுத்தம் தொடர்பான பலகைகளை வைப்பதற்கு முன், சரக போக்குவரத்து அதிகாரிகளிடம் இருந்து உரிய அனுமதிகளைப் பெற வேண்டும்.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை விதிமீறுபவர்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்க நகரம் முழுவதும் வழக்கமான சோதனைகளை மேற்கொள்ளும்.

இந்த விதிமுறைகளை கடைபிடிப்பதற்கும் மற்றும் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்கும் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.