சென்னை: 30 நாளில் 2.5 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என திமுகவினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் உழைக்கும் ஒவ்வொரு திமுக தொண்டர்களுக்கும் என் தலை தாழ்ந்த வணக்கம், நன்றி. எண்ணிக்கைக்குக் கொடுக்கும் அதே அளவு முக்கியத்துவம், ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது கலந்துரையாடுவதை உறுதி செய்ய வேண்டும். மொத்தமுள்ள 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் சேர்த்து 2.5 கோடி பேரை திமுக உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்”  என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

தமிழகத்​தில் அடுத்​தாண்டு சட்​டப்​பேரவை பொதுத்​தேர்​தல் நடை​பெற உள்​ளது.  இந்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற எடப்பாடி தலைமையிலான அணி மற்றும் தவெக தலைவர் விஜய் தலைமையிலான அணி, திமுக அணிக்கு போட்டியாக வரும என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் நோக்கில் திமுக தலைமை தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக,  கடந்த மாதம் நடை​பெற்ற பொதுக்​குழு கூட்​டத்​தில், ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ என்ற முன்​னெடுப்பை முதல்​வர் ஸ்டா​லின் அறி​வித்​தார். அதை சமீபத்தில் தொடங்கியும் வைத்தார். அதன்​படி, தொகு​தி​யில் ஒரு வாக்​குச்​சாவடிக்கு 30 சதவீதம் வாக்​காளர்​களை திமுக உறுப்​பினர்​களாக மாற்​றும் பணி திமுக நிர்​வாகி​களுக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது. இதற்​காக, 68 ஆயிரம் டிஜிட்​டல் ஏஜென்ட்​களுக்கு பயிற்சி அளிக்​கப்​பட்​டுள்​ளது. அத்​துடன், செயலி ஒன்​றும் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.  அதைக்கொண்டு,  திமுகவினர் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகின்றனர். தற்​போது வரை 1.35 கோடிக்​கும் அதி​க​மான உறுப்​பினர்​கள் இணைந்​துள்​ள​தாக திமுக தலைமை அறிவித்துள்ளது.

இந்த  ​நிலை​யில், ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ முன்​னெடுப்பை தீவிரப்​படுத்​தும் வகை​யில், மாவட்​டச் செய​லா​ளர்​களு​டன் நேற்று காணொலி வாயி​லாக முதல்​வர் ஸ்டா​லின் ஆலோ​சனை நடத்​தி​னார். அப்​போது, தமிழகத்​தின் மண், மொழி, மானம் காக்​க​வும், திரா​விட மாடல் அரசின் சாதனை​களை எடுத்​துக்​கூறி, தமிழக மக்​களை ஓரணியில் கொண்​டுவர வீடு​வீ​டாகப் பரப்​புரை மேற்​கொள்​ள​வும், திமுக​வில் அவர்​களை உறுப்​பினர்​களாக்​க​வும், ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ முன்​னெடுப்பை கடந்த 3-ம் தேதி தொடங்​கினோம்.

செல்​லும் இடங்​களில் எல்​லாம் மக்​களின் வரவேற்பு நன்​றாக உள்ளது என கேள்​விப்​படும்​போது கூடு​தல் மகிழ்ச்​சி​யாக உள்ளது. ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ முன்​னெடுப்​பில் உழைக்​கும் ஒவ்​வொரு திமுக உடன்​பிறப்​புக்​கும் என் தலை​தாழ்ந்த வணக்​கம். நன்​றி. நமக்கு இன்​ன​மும் 30 நாட்​கள் இருக்​கின்​றன. ஒவ்​வொரு வீட்​டிலும் குறைந்​த​பட்​சம் 10 நிமிடங்​களாவது நம் கழகத்​தினர் கலந்​துரை​யாடு​வதை நாம் உறு​தி​செய்ய வேண்​டும்.

மத்​திய பாஜக அரசு மற்​றும் அதன் கூட்​ட​ணி​யாக இயங்​கிக் கொண்​டிருக்​கும் அதி​முக உள்​ளிட்ட கட்​சிகள், தமிழகத்​துக்கு இழைத்​துள்ள, இழைக்​க​வுள்ள அநீ​தியை ஒவ்​வொரு குடும்​பத்​தினரிட​மும் எடுத்​துச் சொல்​வது​தான் இந்த முன்​னெடுப்​பின் நோக்​கம். அடுத்த 30 நாட்​களில் தமிழகத்​தில் மொத்​த​முள்ள 68 ஆயிரம் வாக்​குச்​ சாவடிகளி​லும் சேர்த்து 2.5 கோடி பேரை திமுக உறுப்​பினர்​களாகச் சேர்க்க வேண்​டும்.

நாம் உரு​வாக்​கி​யிருக்​கும் பூத் டிஜிட்​டல் ஏஜென்ட்​கள் கழகத்​துக்கு மிகப்​பெரிய சொத்​து. அவர்​களை எதிர்​வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கும், தேர்​தலைக் கடந்​தும் நாம் பயன்​படுத்​திக்​கொள்ள வேண்​டும். இது​வரை இணைக்​கப்​பட்டுள்ள உறுப்​பினர்​களின் விவரங்​கள் முழு​மை​யாக ஆய்வு செய்​யப்​படு​கின்​றன. எந்​தெந்த வாக்​குச்சாவடிகளில் நாம் வழங்​கிய நடை​முறையை சரி​யாகக் கடைபிடிக்​க​வில்​லையோ அங்​கெல்​லாம் மீண்​டும் முதலில்​ இருந்​து தொடங்​கு​வோம்​.

இவ்​வாறு முதல்​வர்​ பேசி​னார்​.