சென்னை: நாளை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடங்க உள்ள நிலையில், நாளை மாலை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில்  திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் திமுக கட்சி கொறடா அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.  நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். அதையடுத்து நாளை மறுதினம் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில்,  நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என  அரசு தலைமை கொறடா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, தி.மு.க.  தலைமை கொறடா கா.இராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் , நாளை மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சட்டபை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும். சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நாளை மாலை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும். தி.மு.க. சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.