பெங்களூரு

ர்நாடக துணை முதல்வர் டி கே சிவக்குமார் இ வி எம் குறித்த எலான் மஸ்க் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

உலக செல்வந்தர்களில் ஒருவரும் எக்ஸ் தள உரிமையாளருமான எலான் மஸ்க் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என்று கூறினார். இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால் இதை முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மறுத்தார். நாடெங்கும் இது குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்

அந்த பதிவில் டி கே சிவக்குமார்,

”நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு நாட்டின் சில பகுதிகளில் தேர்தல் குறித்து நடைபெறும் நிகழ்வுகளுக்கும், எலான் மஸ்க்கின் கருத்துக்கும் தொடர்பு உள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்கள் பற்றி தற்போது சில பகுதிகளில் வெளிவரும் தகவல்கள் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் உண்மை நிலை என்ன என்பது உலகிற்கு புரிந்துள்ளது. எலான் மஸ்க்கின் கருத்தை நான் ஆதரிக்கிறேன். எலான் மஸ்க் தொழில்நுட்ப நிபுணர் என்பதை இந்த உலகமே ஒப்புக் கொண்டுள்ளது.”

என்று தெரிவித்துள்ளார்.