சென்னை

சென்னையில் இருந்து தீபாவளி பண்டிகைக்காக நாளை முதல் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் விவரம் பின் வருமாறு : –

தமிழக அரசு போக்குவரத்து கழ்க மேலாண் இயகுநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 28, 29 மற்றும் 30-ந்தேதிகளில் சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படுகின்ற 2,092 பஸ்களுடன், 4,900 சிறப்பு பஸ்கள் என 3 நாட்களும் சேர்த்து 11,176 பஸ்களும் ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 2,910 சிறப்பு பஸ்களுமாக ஒட்டு மொத்தமாக 14,086 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

அதன்படி, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், பொள்ளாச்சி, ராமேசுவரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், விருத்தாச்சலம், அரியலூர், திட்டக்குடி, செந்துறை, ஜெயங்கொண்டம், போளூர், வந்தவாசி மற்றும் திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பஸ்கள் திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக பட்டுக்கோட்டை, மன்னார்குடி செல்லும் அனைத்து வழித்தட பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்படும்.

சென்னை கோயம்பேடு, புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சீபுரம், செய்யாறு, ஓசூர் மற்றும் பெங்களூர் செல்லும் பஸ்கள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பஸ்கள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம், திருவாரூர் மற்றும் திருத்துறைபூண்டி செல்லும் பஸ்கள் இயக்கப்படும்.

மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பஸ்கள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பஸ்கள் இயக்கப்படுகிறது.”

என அறிவிக்கப்பட்டுள்ளது.