டெல்லி

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமினுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கடந்த மார்ச் 21 ஆம் தேதி டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டு ஏப்ரல் 1-ம் தேதி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.  கெஜ்ரிவால் ஜாமீன் கோரி, டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

அவருக்கு கடந்த 20-ம் தேதி அவருக்கு விசாரணை நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய, மறுநாளே டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுதிர் குமார் ஜெயின், விசாரணை நீதிமன்ற உத்தரவை தற்காலிகமாக நிறுத்திவைத்து உத்தரவிட்டார்.

கெஜ்ரிவால் சார்பில் இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நேற்ரு நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, எஸ்.வி.என்.பட்டி ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு முன்பு அம்மனு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் கெஜ்ரிவால் ஜாமீனுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க மறுப்பு தெரிவித்தனர்.

நீதிபதிகள்,

“கெஜ்ரிவால் ஜாமீனுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் இன்னும் ஓரிரு நாளில் தீர்ப்பு அளித்து விடும். அதுவரை காத்திருப்போம். அதற்குள் நாங்கள் எந்த உத்தரவு பிறப்பித்தாலும், அது ஐகோர்ட்டின் செயல்பாட்டில் குறுக்கிட்டதாக ஆகிவிடும்.”

என்று கூறினர்.

இன்று இந்த வழக்கு நீதிபதி சுதிர் குமார் ஜெயின் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.  நீதிபதி அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களை விசாரணை நீதிமன்றம் சரியாக ஆய்வு செய்யவில்லை என்றும் இந்த வழக்கில் அமலாக்கத்துறைக்கு போதுமான வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும் என்றும் தெரிவித்து கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.