சென்னை: கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஜனவரி 1-ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி உயர்வு கடந்த ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அவை தற்போது வழங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளத. அதனப்டி, தமிழ்நாட்டில், ஜனவரி 1ந்தேதி முதல் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில்,  பேரவை விதி 110ன்சீழ் முதலமைச்சர் ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கு 14 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி அறிவித்து அரசு ஆணை எண் 3-ல் பிறப்பிக்கப்பட்டுள்ள படி, தற்போது பெற்று வரும் 17 சதவிதத்தில் இருந்து, 31 சதவீதமாக அகவிலைப்படி 01.01.2022 தேதி முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஜனவரி 1-ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்க கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களின் அகவிலைப்படி உயர்விலை 1-1-2020 முதல் 30-6-2021 வரை நிறுத்தி வைக்க அறிவுரைகள் வழங்கப்பட்டன. தற்போது தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 1-1-2022 முதல் அகவிலைப்படியினை உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் உத்தரவுப்படி, அகவிலைப்படி தொடர்பாக ஏற்கனவே பதிவாளர் அலுவலக அந்தந்த நிர்வாக பிரிவுகளில் வழங்கியுள்ள அறிவுரைகளின்படியும் அகவிலைப்படி வழங்கப்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இது தொடர்பாக தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கி கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.