நாக்பூர்
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் 144 ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது/.
ம,காராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சத்ரபதி சம்பாஜி நகரில் முகலாய மன்னர் அவுரங்கசீப் கல்லறை உள்ளது. இந்து அமைப்புகள் இந்த கல்லறையை அகற்றக்கோரி கடந்த திங்கட்கிழமை நாக்பூரில் நடத்திய போராட்டத்தில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியது.
இதை தொடர்ந்து அன்று இரவு நாக்பூரில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. மகால், ஹன்சாபுரி பகுதிகளில் போராட்டக்காரர்கள் பல வாகனங்களை தீவைத்து எரித்தனர். வன்முறையி, 42 வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகி கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 35 போலீசார் காயம் அடைந்தனர். இதுவர போலீசார் இதுவரை 54 பேரை கைது செய்துள்ளனர்.
சம்பவம் நடைபெற்று 3 நாட்களுக்கு மேல் ஆகியும் நாக்பூரில் பதற்றம் தணியவில்லை என்பதால் நகரின் முக்கிய பகுதிகளில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிக்கிறது. மேலும் அவுரங்கசீப்பின் கல்லறை அமைந்துள்ள சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள குல்தாபாத்தில் டிரோன்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது.