சென்னை: சென்னையில் நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டி அனிருத் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கும் என சிஎஸ்கே அறிவித்துள்ளது.
ஐபிஎல் 2025ம் ஆண்டுக்கான போட்டி இன்று கொல்கத்தா மைதானத்தில் தொடங்கும் நிலையில், நாளைய போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியானது, சென்னை சூப்பா் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நடைபெற உள்ளது.
இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு சென்னை ஸ்டேடியத்தில் இசை அமைப்பாளர் மற்றும் பாடகர் அனிருத்தின் இன்னிசை கச்சேரி நடைபெற இருப்பதாக சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை போட்டி தொடங்குவதற்க முன்பாக, சேப்பாக்கம் மேக் ஸ்டேடியத்தில் அனிருத் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
18-ஆவது ஐபிஎல் தொடர் இன்று தொடங்கும் நிலையில், முதலாவது போட்டி இன்று (மாா்ச் 22) கொல்கத்தாவின் ஈடன்காடன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இதைத்தொடா்ந்து நாளை (மாா்ச் 23) சென்னையில் இரண்டாவது போட்டி நடைபெற உள்ளது. இந்த இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பா் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இணையதளத்தில் தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீா்ந்தது. இதனால் கிரிக்கெட் ரசிகா்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனா்.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் சென்னை – மும்பை போட்டியன்று சேப்பாக்கம் மைதானத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. போட்டி நடப்பதற்கு முன்பாக மாலை 6.30 முதல் 6.50 மணி வரை இந்த இசை நிகழ்ச்சி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டி விவரங்கள்:
- மார்ச் 23: சி.எஸ்.கே. Vs மும்பை இந்தியன்ஸ்
- மார்ச் 28: சி.எஸ்.கே. Vs பெங்களூரு
- ஏப்ரல் 05: சி.எஸ்.கே. Vs டெல்லி
- ஏப்ரல் 11: சி.எஸ்.கே. Vs கொல்கத்தா
- ஏப்ரல் 25: சி.எஸ்.கே. Vs ஹைதராபாத்
- ஏப்ரல் 30: சி.எஸ்.கே. Vs பஞ்சாப்
- மே 12 : சி.எஸ்.கே. Vs ராஜஸ்தான்