சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மேலும் மேலும் உச்சம்பெற்று வருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் மேலும் 14,482 பேர் பாதிப்புக்குள்ளான நிலையில், 80 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவலின் 2வது நாடு முழுவதும் உச்சமடைந்துள்ளது. இதனால் தினசரி பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ளது. தமிழகத்திலும் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில், புதிதாக மேலும் 14,482 பேருக்கு உறுதியான நிலையில், இதுவரை பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 10,66,329 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில் 4086 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று பாதிக்கப்பட்டவர்களில் 8,874பேர் ஆண்கள், 5,968பேர் பெண்கள்.
தற்போதைய நிலையில் சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 1,00,668ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 80 பேர் உயிரிழந்துள்ளார். இவர்களில் 41 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 39 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,475ஆக அதிகரித்துள்ளது.
இன்று 9,142பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,52,186ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 263 பரிசோதனை மையங்கள் உள்ளன.
