டெல்லி: கொரோனா குணமடைந்தவர்கள் மது, புகை பழக்கங்களை கைவிட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.  அதில் தெரிவித்துள்ளதாவது,

கொரோனாவிலிருந்து குணமடைந்த பின்பும் வெளியே செல்லும் போது முகக்கவசம் பயன்படுத்துதல், சமூக விலகலைக் கடைபிடித்தல், கைகளை சுத்தமாகப் பராமரித்தல் போன்றவற்றை செய்ய வேண்டும்.

உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

 வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேத மருந்தை எடுத்துக் கொள்ளவது.

வீட்டில் இருக்கும் உடல் வெப்பநிலை குறித்து அவ்வப்போது பரிசோதனை செய்தல், ரத்த அழுத்தப்பரிசோதனை, ரத்தத்தில் சர்க்கரை அளவு, உடலில் ஆக்ஸிஜன் அளவு ஆகியவற்றை பரிசோதித்துக் கொள்ளுதல் அவசியம்.

தொடர்ந்து வறட்டு இருமல், தொண்டை கட்டு போன்றவை இருந்தால், ஆயுஷ் மருத்துவர் கள், அல்லது அலோபதி மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகள் எடுக்கலாம். அல்லது ஆயுஷ் மூலிகைப் பொடிகள் மூலம் நீராவி பிடிக்கலாம், தொண்டையில் நீர் படுமாறு வாய் கொப்பளிக்கலாம்.

நாள்தோறும் காலையில் இளம் சடுநீர், அல்லது பாலில் சவன்பிராஷ் மருந்தை கலக்கி பருகலாம். இது ஆயுஷ் மருத்துவர் களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் தங்களின் அனுபவங்களை உறவினர்களிடம், நண்பர்களிடம் பகிர்ந்து சாதகமான சூழல்களை உருவாக்கி நம்பிக்கை ஏற்படுத்தலாம்.

சமூகவலைத்தளத்திலும் தனது கொரோனா அனுபவங்களை விளக்கி எழுதி சமூகத்தில் நம்பிக்கை அளிக்கலாம்.

கொரோனாவிலிருந்து குணமடைந்தபின் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சுயஉதவிக் குழுக்கள், தகுதியான மருத்துவர்கள், மருத்துவ, மனநல பயிற்சியாளர்கள் ஆலோசனை களை உதவிகளைப் பெறலாம்.

இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

[youtube-feed feed=1]