டில்லி: பீஹாரில் 35 லட்சம் வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதை நிராகரித்துள்ள தேர்தல் ஆணையம், நாடு முழுவதும் இதுபோன்ற போலி வாக்காளர்களை நீக்க நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்த்து, காங்கிரஸ், திமுக என பல தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், உச்சநீதிமன்றமும், தேர்தல் ஆணைய நடவடிக்கைக்கு பச்சைக்கொட்டி காட்டி உள்ளது. இதையடுத்து வாக்காளர்கள் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களை நீக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
பீஹார் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக உள்ளது. இதையடுத்து, அங்கு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் ஆணையம் தொடங்கி நடத்தி வருகிறது.
வாக்காளர் பட்டியல் மறுசீரமைப்பு என்ற பெயரில், வெளிநாடுகளில் அதிகளாக வந்து போலி ஆதார் அட்டை மூலம் வாக்குரிமை பெற்றுள்ளதை கண்டறிந்துள்ளது. வீடு, வீடாக சென்று நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் போது, நேபாளம், வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்கள் பெயர்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
அதன்படி, பீகாரில் மட்டும் இதுவரை 35.5 லட்சம் போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுஉள்ளனர். அவர்களை நீக்க நடவடிக்கை எடுத்து வருகறிது.
தேர்தல் ஆணைய அதிகாரிகளின் கூற்றுப்படி, வாக்காளர் பட்டியலைச் சுத்தப்படுத்த SIR மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இது இடம்பெயர்வு, இறப்பு மற்றும் நகல் பதிவுகள் போன்ற தற்போதைய யதார்த்தங்களை பிரதிபலிப்பதை உறுதி செய்கிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த சிறப்பு நடவடிக்கையை காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
ஆனால், அதை கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளின் விளைவாக, 35 லட்சத்துக்கும் அதிகமான பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு பணிகள் மூலம் உயிரிழந்த 12.5 லட்சம் வாக்காளர்கள் (1.59 சதவீதம்) பெயர்கள் பட்டியலில் இன்னமும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 17.5 லட்சம் (2.2 சதவீதம்) பேர் பீஹாரில் இருந்து நிரந்தரமாக வெளியேறிவிட்டதும் தெரிய வந்துள்ளது. இது தவிர, 5.5 லட்சம் (0.73 சதவீதம்) வாக்காளர்கள் பெயர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது
இந்த கணக்கீட்டின் படி, ஒட்டுமொத்தமாக 35.5 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றனர். இது ஒட்டு மொத்த வாக்காளர் பட்டியலில் 4.5 சதவீதம் ஆகும். ஜூலை 25ம் தேதிக்குள் திருத்தப் பணிகளை நிறைவு செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பீகார், ஒடிசா, மேற்குவங்கம், டெல்லி உள்பட பல வடமாநிலங்களில் போலி வாக்காளர்கள் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. ரூ.1,000க்கு போலி வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்குவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆஜ் தக் நடத்திய ஒரு ஸ்டிங் ஆபரேஷன் மூலம், அத்தகைய ஏற்பாடு சாத்தியம் என்றும், அரசியல்வாதிகள் வாக்குகளை வாங்க இதைப் பயன்படுத்தலாம் என்றும் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.