காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று ஸ்ரீநகர் பயணம் மேற்கொள்கிறார்.

ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அம்மாநில கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

காங்கிரஸ் கட்சி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த பல தேர்தல்களாக பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் இந்த தேர்தலில் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி அல்லது மெஹபூபா முக்தியின் பி.டி.பி. ஆகிய இரு கட்சிகளில் ஒன்றுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த வாய்ப்புகள் குறித்து கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசிக்க இருப்பதாகவும் அதன்பின் அவ்விரு கட்சித் தலைவர்களையும் தனித்தனியே சந்தித்து ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.