ஸ்ரீநகர்

காங்கிரஸ் ஜம்மு காஷ்மீரில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய நாட்களில் ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை. அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. பாஜக இந்த தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக பா.ஜ.க. அறிவித்துள்ள நிலையில், தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை உருவாக்க காங்கிரஸ் விரும்புகிறது.

காங்கிரஸ் கட்சியின் ஜம்மு காஷ்மீர் தேர்தல் பணிகள் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கலந்துரையாடினர். பிறகு செய்தியாளர்களை சந்தித்த கார்கே, ஜம்மு காஷ்மீரில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை உருவாக்க ராகுல் காந்தி ஆர்வம் காட்டுவதாக கூறினார்.

மேலும் கார்கே,

‘மக்களவை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பா.ஜ.க. நிறைவேற்ற விரும்பிய சில சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன அல்லது நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டன. இதனால் பா.ஜ.க. கவலையடைந்துள்ளது. வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட சில சட்டங்களை நிறைவேற்ற, பா.ஜ.க. தனது மெஜாரிட்டியை பயன்படுத்தியது.இம்மாநிலத்தை பொறுத்தவரை தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க. அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை’

என்று தெரிவித்துள்ளார்.