டெல்லி

காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணி மூத்த தலைவர்களை இன்றும் நாளையும் டெல்லியில் தங்க அழைப்பு விடுத்துள்ளது.

 

ஜூன் 1 ஆம் தேதியுடன் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பா.ஜனதா 350 இடங்களுக்கு மேல் பிடிக்கும் என கருத்துக் கணிப்பு நடத்திய அனைத்து நிறுவனங்களும் கணித்துள்ளதனால் பாஜக தலைவர்கள், தொண்டர்கள் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

ஆனால்ல் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் தேர்தல் கருத்துக் கணிப்பு முற்றிலும் நேர் எதிராக தேர்தல் முடிவுகள் இருக்கும். நாங்கள் 295 இடங்களில் வெற்றி பெறுவோம் என உறுதியாக தெரிவித்துள்ளனர். இதையொட்டி காங்கிரச் கட்சியின் மூத்த தலைவர்களும், தொண்டர்களும் வெற்றி கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றன.

இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் டெல்லிக்கு வருமாறு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறும் நிலையில், தேர்தல் முடிவுகளில் குளறுபடி இருந்தால் ஜனாதிபதியை சந்தித்து புகார் அளிக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  நாளை இரவு அல்லது நாளை மறுநாள் வரை இந்தியா கூட்டணிக்கட்சி தலைவர் டெல்லியில் தங்கியிருக்க காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.