டெல்லி

ரும் 14 ஆம் தேதி அன்று பிரதமர் மோடி ஜம்முவில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு-காஷ்மீர் சட்டசபைக்கு வருகிற 18, 25 மற்றும் அக்., 1ல் ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. 90 தொகுதிகள்ளுக்கு நடக்கும் இந்த தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டியிட்டு 51 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

அதே வேளையில் காங்கிரஸ் கட்சி தேசிய மாநாடு கட்சியுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் 32 தொகுதிகளிலும் தேசிய மாநாட்டு கட்சி 51 இடங்களிலு போட்டியிடுகின்றன. மேலும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தேசிய பாந்தர்ஸ் கட்சி தலா ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது.

பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு மத்திய உள்துறை அமைசர் அமித்ஷா ஜம்முவில் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டி அடுத்த கட்டமாக ரஜோரி, பூஜ் மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார். பிரதமர் மோடி பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து ஜம்முவில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

மோடி வரும் 14- ந்தேதி அவர் ஜம்முவில் பிரசாரம் செய்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.  மேலும் பிரதமர் மோடி 2 பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பேசுவார் என்று கூறப்படுகிறது. ஜம்மு பகுதியில் மோடியின் பிரசாரம் பா.ஜ.க.வுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும் என்று அந்த கட்சி கருதுகிறது.