பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூன்று வாரங்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9:30 மணிக்கும் ஒளிபரப்பாகிற பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இம்முறையும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர்.

1. மதுமிதா (ஆடை வடிவமைப்பாளர்)
2. இசைவாணி (கானா பாடகி)
3. அபிஷேக் (விமர்சகர்)
4. ராஜு ஜெயமோகன் (சீரியல் நடிகர்)
5. பிரியங்கா தேஷ்பாண்டே (தொகுப்பாளினி)
6. அபினய் வட்டி (நடிகர்)
7. சின்னப்பொண்ணு (நாட்டுப்புற பாடகி)
8. பவானி ரெட்டி (சீரியல் நடிகை)
9. நாடியா சாங் (மலேஷியாவை சேர்ந்த மாடல் அழகி)
10. இமான் அண்ணாச்சி (நகைச்சுவை நடிகர்)
11. வருண் (நடிகர்)
12. ஐக்கி பெரி (ராப் பாடகி)
13. அக்‌ஷரா ரெட்டி (மாடல் அழகி)
14. நிரூப் நந்தகுமார் (நடிகர்)
15. நமீதா மாரிமுத்து (மாடல் அழகி)
16. சிபி சந்திரன் (மாஸ்டர் பட நடிகர்)
17. சுருதி ஜெயதேவன் (மாடல் அழகி)
18. தாமரைச் செல்வி (நாடக கலைஞர்)

இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர். இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா , சின்னப்பொண்ணு அடுத்தடுத்த வாரங்களில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட, இந்த வாரம் சேலத்து பெண் சுருதி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்த வாரம் வானம் ஆற்றலுக்கான சக்தி. இந்த வாரம் முழுக்க பாவனிக்கு லிவ்விங் ஏரியாவில் முன்னுரிமை அளிக்கப்படும். உதவியாளராக தாமரையை தேர்வு செய்தார் பாவனி.

’பொம்மலாட்டம்’ டாஸ்கில் பரிதாப ஓட்டு பெற்று அபிநவ் இந்த வார தலைவரானார். ஆனால் இசை, நாணயத்தின் சக்தியை பயன்படுத்தி இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவரானார்.

இந்த நிலையில் இந்தவாரத்திற்கான லக்ஸூரி பட்ஜெட் டாஸ்க் வித்தியாசமாதாக வழங்கப்படுவது இன்றைய முதல் ப்ரோமோவில் இருந்தது. “நீயும் பொம்மை நானும் பொம்மை தெரியும் உண்மை” என்ற பெயரில் நடக்கும் இந்த டாஸ்கில், போட்டியாளர்கள் அவர்களுக்காக விளையாடாமல் மற்றவர்கள் வெற்றிக்காக விளையாட வேண்டும் என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், வருண் மற்றும் நிரூப் இடையே மோதல் ஏற்படுவது தெரிகிறது. பொம்மையை எடுப்பதில் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்படுவது தெரிகிறது. நீ நியாயமாக விளையாடுகிறாயா? அசிங்கமாக இல்லை இப்படி பொம்மையை பிடித்து இழுக்கிறாய்? என வருண் கேட்கிறார்.

மூன்றாவது ப்ரோமோவிலும், இந்த பிரச்னை தொடர்வது தெரிகிறது. இதில் நிரூபிற்கு ஆதரவாக சிபி பேசுகிறார், அதேபோல வருணிற்கு ஆதரவாக அக்ஷரா பேசுவது தெரிகிறது. அப்போது சிபி, செண்பகமே செண்பகமே டாஸ்கில், அக்ஷ்ராவும் இப்படி தானே செய்தார், அது தப்பு இல்லை என்றால் இதுவும் தப்பு இல்லை என்கிறார். இதனால் கடுப்பாகும் அக்ஷ்ரா, என்ன தப்பு இல்லையா? அறிவு இல்லையா? என ஆக்ரோஷமாக கேட்கும் காட்சிகள் உள்ளது.