பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூன்று வாரங்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9:30 மணிக்கும் ஒளிபரப்பாகிற பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இம்முறையும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர்.

1. மதுமிதா (ஆடை வடிவமைப்பாளர்)
2. இசைவாணி (கானா பாடகி)
3. அபிஷேக் (விமர்சகர்)
4. ராஜு ஜெயமோகன் (சீரியல் நடிகர்)
5. பிரியங்கா தேஷ்பாண்டே (தொகுப்பாளினி)
6. அபினய் வட்டி (நடிகர்)
7. சின்னப்பொண்ணு (நாட்டுப்புற பாடகி)
8. பவானி ரெட்டி (சீரியல் நடிகை)
9. நாடியா சாங் (மலேஷியாவை சேர்ந்த மாடல் அழகி)
10. இமான் அண்ணாச்சி (நகைச்சுவை நடிகர்)
11. வருண் (நடிகர்)
12. ஐக்கி பெரி (ராப் பாடகி)
13. அக்‌ஷரா ரெட்டி (மாடல் அழகி)
14. நிரூப் நந்தகுமார் (நடிகர்)
15. நமீதா மாரிமுத்து (மாடல் அழகி)
16. சிபி சந்திரன் (மாஸ்டர் பட நடிகர்)
17. சுருதி ஜெயதேவன் (மாடல் அழகி)
18. தாமரைச் செல்வி (நாடக கலைஞர்)

இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர். இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா , சின்னப்பொண்ணு அடுத்தடுத்த வாரங்களில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட, இந்த வாரம் சேலத்து பெண் சுருதி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

முதல் ப்ரோமோவில், இந்த வார தலைவருக்கான போட்டியில் பொம்மலாட்டம் டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதில் பொம்மைகள் வைக்கப்பட்டு, கூடவே தலைவருக்கு போட்டியிடுபவர்களின் படங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. யார் தலைவராக வேண்டாம் என நினைக்கிறார்களோ அவர்களின் பொம்மை தலையில் இருக்கும் மண் சட்டியை உடைக்க வேண்டும். அப்போது, ‘எனக்கு எந்த வாய்ப்பும் இல்லை’ என அக்‌ஷரா சொல்ல, சிபி அவரது பொம்மை தலையை அடித்து உடைக்கிறார்.

இரண்டாவது ப்ரோமோவில், தலைவர் போட்டியில், ராஜு – நிரூப் பொம்மையை உடைப்பது தெரிகிறது. இதனை தொடந்து நிரூப் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது இங்கு வந்தது உன் கேமை விளையாட தானே? 13 பேரை நல்லவர்களாக காட்டி நீ பேர் வாங்குகிறாய் அது சுயநலம் தானே என்கிறார். இது யாரை பார்த்து கேட்கிறார் என்று தெரியவில்லை, ஆனால் பிரியங்கா நீ உன் கருத்தை கூறு மற்றவர்கள் கருத்து குறித்து நீ ஏன் பேசுகிறாய்? அனைத்து இடத்திலும் நான் பேசியது குறித்து மட்டுமே நீ கமெண்ட் செய்தால் உன் கருத்து எதுவும் இல்லாமல் போய்விடும் என்கிறார்.

மூன்றாவது ப்ரோமோவில், இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெறுகிறது. அதில் பிரியங்கா, பாவ்னி, அபினய், நிரூப் ஆகியோர் ராஜூவை நாமினேட் செய்கின்றனர். அதில் ராஜு பாரபட்சம் பார்ப்பதாகவும் , இன்னும் முழுமையாக விளையாடவில்லை என்ற காரணங்கள் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ராஜு, இமான் அண்ணாச்சி ஆகியோர் பிரியங்காவை நாமினேட் செய்கின்றனர். சிறிய விஷயத்திற்கு கூட சண்டை போடுவதாகவும், தான் பேசுவது தான் நியாயம் என்பது போல பேசுகிறார் என்றும் பிரியங்காவை கூறுகின்றனர். இதனால் பிரியங்கா மற்றும் ராஜு இந்தவார நாமினேஷன் லிஸ்டில் இருப்பது உறுதியாகியுள்ளது.