சிரஞ்சீவியின் 154 வது படத்தின் பூஜை இன்று நடந்தது.

தமிழ் கத்தி படத்தின் ரீமேக்தான் சிரஞ்சீவியின் 150 வது படம். அடுத்து சைரா நரசிம்ம ரெட்டியில் நடித்தார். 152 வது படமாக ஆச்சார்யா தயாராகியுள்ளது. 153 வது படம் காட்பாதரில் தற்போது அவர் நடித்து வருகிறார்.சிரஞ்சீவியின் 154 வது படத்தை பாபி இயக்குகிறார்.

மெகா 154 என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்தப் படத்தை பிரபல இயக்குனர் விவி விநாயக் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.

இந்த பூஜையில் கொரட்டல சிவா, மெஹர் ரமேஷ் உள்பட ஏராளமான இயக்குனர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.