PwC நிறுவனத்துக்கு 6 மாத தடை மற்றும் ரூ. 520 கோடி ($62 மில்லியன்) அபராதம் விதித்து சீனா உத்தரவிட்டுள்ளது.

உலகளாவிய தணிக்கை நிறுவனமான ப்ரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர் (PwC) நிறுவனத்தின் சீன செயல்பாட்டிற்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

2021ம் ஆண்டு ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்ட எவர்கிராண்ட் நிறுவனத்தின் (Evergrande) கணக்குகளை சரிவர மதிப்படாத காரணத்திற்க்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2018 முதல் 2020 வரை எவர்கிராண்ட் நிறுவனம் பல்வேறு குளறுபடிகளை செய்திருந்ததாகவும் அதன் தணிக்கை நிறுவனமாக செயல்பட்ட ப்ரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர் இதை கவனிக்க தவறியதாகவும் கூறப்படுகிறது.

இந்த காலகட்டத்தில் தனது நிறுவனத்தின் வளர்ச்சி 6.71 லட்சம் கோடி ரூபாய் (80 பில்லியன் அமெரிக்க டாலர்) அளவுக்கு அதிகரித்ததாக அதன் நிதியறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக

“தீவிரமான தணிக்கை குறைபாடுகள்” காரணமாக ஏற்கனவே டெலாய்ட் நிறுவனத்திற்கு 31 மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் மூன்று மாத தடை விதிக்கப்பட்டதே அதிகபட்ச தண்டனையாக கருதப்பட்டது.

தற்போது PwC நிறுவனத்துக்கு 6 மாத தடை மற்றும் ரூ. 520 கோடி அபராதம் மட்டுமன்றி அதன் குவாங்சோ கிளைக்கான அனுமதியை ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.