சென்னை: தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ரூ.10 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 25 அன்புச்சோலை மையங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். திருச்சியில் உள்ள அன்புசோலை மையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.

மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவற்காகவும், வீடுகளில் உள்ள முதியவா்கள் மனம் சோர்வடையாமல் ஊக்கம் பெற உதவும் வகையிலும் தமிழக அரசால் ‘அன்புச் சோலை திட்டம்’ உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் இன்று தொடக்கி வைத்தார்.
இந்த அன்புசோலை மையங்கள், . ரூ.10 கோடி செலவில் 25 இடங்களில் கட்டப்பட்டுள்ள மூத்தோர்களுக்கான அமைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள அன்புசோலை மையத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் அங்குள்ள முதியோர்களுடன் உரையாடி மகிழ்ந்ததுடன், அவர்களுடன் சேர்ந்து கேரம் விளையாடினார்.
தமிழ்நாட்டில், மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட 10 மாநகராட்சிகளில் மொத்தம் 25 அன்புச்சோலை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரியில் தலா 2, சென்னையில் 3 என அன்புச்சோலை- மனமகிழ் வள மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் இன்று முதலமைச்சர் திறந்து வைத்தார்.