சென்னை: ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்  என பிரதமர் மோடியை  முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடி கோவையில் நடைபெற்ற இயற்கை வேளாண்மை மாநாட்டில் கலந்துகொண்டு,  விவசாயிகளிடம் கலந்துரையாடிவிட்டு சென்ற நிலையில், கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய முடியாத ஏற்பட்டுள்ளதாக மத்தியஅரசு கூறி உள்ளது. இதை சுட்டிக்காட்டிய, முதல்வர் ஸ்டாலின்,  மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. அதற்குள்  விவசாயிகளுக்கு அடுத்த துரோகத்தை மத்தியஅரசு செய்துள்ளது என விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பெய்த மழை காரணமாக, விவசாயிகளின் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாணனது. மேலும் நெல்மூட்டைகளை சேமித்து வைக்க தேவையான வசதிகளை தமிழ்நாடு அரசு செய்யாததும் ஒரு காரணமாக கூறப்பட்டது. இதையடுத்து, ஈரப்பத்துடன் கூடிய நெல்மூட்டைகளை மத்தியஅரசு கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரியிருந்தனர். இதுதொடர்பாக தமிழ்நாடுஅரசும், மத்தியஅரசுக்கு கடிதம் எழுதியது.

இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்,  பிரதமர் மோடிக்கு எழுதியிருந்த கடிதத்தில், தமிழ்நாடு குறுவை பருவத்தில் அதிக நெல் உற்பத்தி மற்றும் கொள்முதலில் சாதனை படைத்துள்ளதை யடுத்து விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்தி விரைந்து ஆணை வழங்கிட வேண்டும் என கேட்டிருந்தார். மேலும் செறிவூட்டப்பட்ட அரிசி மணிகளின் மாதிரி எடுக்கும் அதிகாரத்தை தென்னிந்திய மாநிலங்களில் உள்ள இந்திய உணவுக் கழக அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.

இதையயடுத்து மத்தியஅரசு அதிகாரிகள் தமிழ்நாடு வந்துஆய்வு செய்தனர்.  இந்த நிலையில் நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்திற்கான அளவை உயர்த்த மத்திய அரசு மறுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்! கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி பிரதமர் வந்து சென்ற ஈரம்கூட இன்னும் காயவில்லை; அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான நமது கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய அரசு பா.ஜ.க. அரசு.

பிரதமர் மோடிக்கு எதிராக சீறிய முதலமைச்சர் ஸ்டாலின்
கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை? விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை? கண்ணீர் ஏன் தெரியவில்லை? கடந்த ஆண்டுகளில், தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளின் அடிப்படையில், இத்தகைய ஈரப்பத அளவிற்கான தளர்வைப் பலமுறை வழங்கிய ஒன்றிய அரசு தற்போது வழங்க மறுப்பது ஏன்?

கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் இருப்பது விவசாயிகளுக்கு எந்தவிதத்தில் நன்மை செய்யும் என நினைக்கிறீர்கள்? உடனடியாக இவற்றை மறுபரிசீலனை செய்வதோடு, தமிழ்நாட்டின் கோரிக்கைகள் மீது நல்லதொரு முடிவெடுத்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஒன்றிய அரசு நன்மை செய்யும் என நம்புகிறேன் என  தெரிவித்துள்ளார்.