சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் விமல் வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பித் தர வேட்ம் என உத்தரவிட்டுள்ளது

மன்னர் வகையறா என்னும் தமிழ்ப்படத்த  நடிகர் விமல் தனது ஏ3வி தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து நடித்திருந்தார். இபடத்தை தயாரிப்பதற்காக கோபி என்பவரிடம் விமல் ரூ.5 கோடி கடன் வாங்கியு. இதில் ரூ.3.6 கோடியை குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பிச் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்துள்ளார்.

ஆயினும், விமல் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என்பதால்  ரூ.3.6 கோடியை 18 சதவீத வட்டியுடன் திருப்பிச் செலுத்த நடிகர் விமலுக்கு உத்தரவிட வேண்டும் என கோபி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நடிகர் விமல் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகாததால், கடன் தொகையை 18 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்க நடிகர் விமலுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.