சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் தவெக கட்சி கொடி விவ்காரத்தில் நடிகர் விஜய்க்கு சம்மன் அனுப்பி உள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில்ல் நடிகர் விஜய்யின் த.வெ.க. கட்சிக் கொடி நிறம் தொடர்பாக புதிய வழக்கு தொடரப்பட்டிருந்தது.  இந்த வழக்கு தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை என்ற அமைப்பு பதிவு செய்துள்ளது.  இந்த தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை, தமிழக அரசு பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டு அறக்கட்டளையாக செயல்பட்டு வருகிறது.

சபைக்கு சிவப்பு – மஞ்சள் – சிவப்பு நிறங்கள் இடம்பெற்றுள்ள கொடி உருவாக்கப்பட்டு கடந்த 2023-ம் ஆண்டு வர்த்தக முத்திரைக்கான பதிவையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளது. தவெக கட்சித் தலைவர் விஜய் கடந்த 2024 தொடங்கி அறிமுகம் செய்த கொடியில் சிவப்பு – மஞ்சள் – சிவப்பு நிறங்கள் இடம் பெற்றிருந்தய்ஜ்ச்ச்; இதை எதிர்த்தும், தவெக கட்சி கொடியில் உள்ள வண்ணங்களை நீக்க உத்தரவிடக் கோரியும் சபை நிறுவனர் தலைவர் பச்சையப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தமிழக வெற்றிக் கழக கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்றக் கோரி பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தவெக கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள வண்ணத்தை நீக்க கோரி மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது அக்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருந்தது. த்ச்ப்ர்ல்ச் தவெக கட்சிக் கொடி தொடர்பாக தவெக மற்றும் அதன் தலைவர் விஜய் பதிலளிக்க உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.