அமராவதி
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்தி திணிப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் கட்சியினர் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மும்மொழி கொள்கை மூலம் பா.ஜ.க. அரசு தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சி செய்வதாக தி.மு.க. அரசு குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், மும்மொழிக் கொள்கையில் இந்தி கட்டாயம் கிடையாது என பா.ஜ.க. கூறி வருகிறது.
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு இது குறித்து ஆந்திர சட்டசபையில்,
“நாம் நமது தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதே சமயம், டெல்லியில் தகவல் தொடர்புக்கு பயனுள்ளதாக இருப்பதால் இந்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். இந்தி தேசிய மொழி, ஆங்கிலம் சர்வதேச மொழி.
வாழ்வாதாரத்திற்காக நாம் எத்தனை மொழிகளையும் கற்றுக்கொள்வோம். ஆனால் தாய்மொழியை நாம் மறக்க மாட்டோம். மொழி தொடர்புக்கு மட்டுமே. அதிக மொழிகளை கற்றுக்கொள்வது சிறந்தது.
சிலர் ஆங்கில மொழியை அறிவு நினைக்கிறார்கள். மொழி என்பது தொடர்புக்கு மட்டுமே. அது அறிவைக் கொண்டுவராது. தாய்மொழியை கற்றுக்கொள்வது எளிதானது. தாய்மொழியில் படிக்கும்போது கல்வி அறிவு மேம்படும்.”
என்று உரையாற்றி உள்ளார்.