டெல்லி

நேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடிமற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார்.

நேற்று மாலை ஆந்திர முதல்வர்சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பு டெல்லியில்உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

சந்திப்பின் போது ஆந்திர மாநில வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமரிடம் சந்திரபாபு நாயுடு பேசியதாகவும் மாநில அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிதியை விரைந்து ஒதுக்கிடுமாறு சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதைத் தொடர்ந்து மத்திய நிதி அமைசர் நிர்மலா சீதாராமனை சந்தித்த சந்திரபாபு நாயுடு இதே கோரிக்கையை வலியுறுத்தி உள்ளார்.  இவர்களைத் தவிர மேலும் சில மத்திய மந்திரிகளை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசியுள்ளார்.