சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

இன்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் வட தமிழகம்தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில், புதுச்சேரிக்கும் நெல்லூருக்கு இடையே சென்னைக்கு வடக்கே கரையைக் கடந்தது.

அதேவேளையில் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறதுமேலும் லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது

எனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கடலூர் ஆகிய 9 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது”

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.