சென்னை

சென்னை வானிஐ ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

இன்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்

”மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் 3-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

அதாவது நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி,நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.