சென்னை: தமிழ்நாட்டில் வரும் 14ந்தேதி  மற்றும் 15ந்தேதி சென்னை உள்பட பல மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கையுடன் அலட்டடாக இருக்க தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது.

லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மத்திய கிழக்கு அரபிக்கடலில் கர்நாடகா-கோவா கடற்கரையில் நீடிக்கிறது. மேலும் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் வரும் 12-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 14-ம் தேதி வரை பெரும்பாலான இடங்களிலும், 15 மற்றும் 16-ம் தேதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன்  அதி கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை  விடுத்துள்ளது.

இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கையுடன் தயாராக இருக்கும்படி, வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி , சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அதில்,  மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்யவும் பேரிடர்களை கையாள்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க உத்தரவு அளித்துள்ளது.

கன முதல் மிக கனமழை பெய்தால் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்வதோடு இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளது.

கன முதல் மிக கனமழை பெய்யும் பட்சத்தில் அனைத்து மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும‘ மீட்பு பணிக்கு தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தல்.

மாவட்ட அளவில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அக்டோபர் 14ந்தேதி சென்னை உள்பட பல மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும்! பாலசந்திரன் எச்சரிக்கை