டெல்லி

த்திய அரசு இதுவரை இந்தியாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஆப்ரிக்க நாடுகளில் மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து இதுவரை 27,000 தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த காய்ச்சலால் 1,100 பேர் உயிரிழந்துள்ளனர். குரங்கு காய்ச்சல் ஆப்பிரிக்காவில் அதிகம் காணப்பட்ட நிலையில் அண்டை நாடுகளுக்கும் பரவியது.

இது உலக அளவில் பெருந்தொற்றாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் குரங்கு காய்ச்சல் பரவலை கவலை அளிக்கக்கூடிய பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு உலக நாடுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில் வெளியாகியுள்ளது.

நேற்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா தலைமையிலான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றபோது, குரங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பிறகு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்  ஒரு அறிக்கைஅயைவெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

”இதுவரை நாட்டில் யாருக்கும் குரங்கு காய்ச்சல் அறிகுறி இல்லை. இருப்பினும், நிலைமையை சுகாதார அமைச்சகம் கவனித்து வருகிறது. எந்த நேரத்திலும் பரவல் அதிகரிக்கும் என்பதால், அதைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எல்லைப் பகுதியில் சோதனைகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. துறைமுகம், விமான நிலையங்கள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.