டெல்லி

த்திய அமைச்சர்  கிரண் ரிஜிஜு வக்பு மசோதாவை எதிர்ப்பவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டு குழு பரிந்துரை செய்தபடி, மத்திய வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவில் திருத்தங்கள் செய்யப்பட்டு, மத்திய அமைச்சரவையும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வந்தது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் வக்பு மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது.

மசோதாவுக்கு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்துள்ள நிலையில், பா.ஜ.க. தனக்கிருக்கும் பெரும்பான்மையை பயன்படுத்தி இந்த திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளது. தற்போது மக்களவையில் உள்ள 542 உறுப்பினர்களில் 293 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜ.க.விற்கு மட்டும் 240 எம்.பி.க்கள் உள்ளனர்.

மேலும் மாநிலங்களவையில் பெரும்பான்மைக்கு 119 உறுப்பினர்களின் ஆதரவு தேவையாகும். இங்கு பா.ஜ.க.விற்கு மட்டும் 98 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களுடன் கூட்டணியையும் சேர்த்தால் 123 உறுப்பினர்கள் உள்ளனர். இன்று நாடாளுமன்றத்தில் மிக முக்கியமான மசோதா தாக்கல் செய்யப்பட இருப்பதால், எம்.பி.க்கள் அனைவரும் தவறாது அவை நடவடிக்கையில் கலந்து கொள்ள வேண்டும் என பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் தங்கள் கட்சி எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டதுதை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு,

“வக்பு மசோதா மூலம் மசூதிகள் கையகப்படுத்தப்படும் என்பது தவறான பிரசாரம் ஆகும்.  பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்கான அம்சங்கள் மசோதாவில் இடம் பெற்றுள்ளன.

வக்பு வாரிய நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபடாது அதில், தலையிடுவதற்காக மசோதா கொண்டு வரப்படவில்லை . இந்த மசோதாவை எதிர்ப்பவர்களை வரலாறு மன்னிக்காது ”

என உரையாற்றி உள்ளார்.

[youtube-feed feed=1]