சென்னை: இருமல் மருந்தால் 24 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் மருந்து தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் மத்தியஅரசு ஒருமுறைகூட ஆய்வு செய்யவில்லை என பேரவையில் எடப்பாடி பழனிச்சாமியின் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் பேசிய தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார்.

தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை உட்கொண்டு, மத்தியப்பிரதேசத்தில் 24 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த நிறுவனத்துக்குசீல் வைக்கப்பட்டு, அந்த மருந்துகளும் தடை செய்யப்பட்டது. உலக சுகாதார நிறுவனமும், அந்த மருந்துகளை தடை செய்ய உலக நாடுகளுக்கு அறிவுறுத்தியது. இந்த மருந்து நிறுவனத்தில், கடந்த 6 வருடங்களாமத்திய அரசு ஆய்வு செய்யவில்லை. அதுதான் விதிமீறலுக்கு முக்கிய காரணம் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் குற்றம் சாட்டியிருந்தார்.
மறுபக்கம் இந்த விவகாரத்தில் அதிமுக, பாஜக கட்சிகள் திமுக அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில், இருமல் மருந்து விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதிமுக, பாஜக உறுப்பினர்கள் ஆதரவுடன் பழனிசாமி, இந்த பிரச்சனையை எழுப்பி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியம் பதிலளித்தார்.
குழந்தைகள் இறப்பு நடந்து 25 நாட்களுக்கு பின்னர் தான் தமிழகத்திற்கு தகவல் கிடைத்தது. 5 குழந்தைகள் மரணம் தொடர்பான செய்தி கிடைத்ததும் 2 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து, சர்ச்சைக்குரிய மருத்து தயாரிப்பு நிறுத்தப்பட்டது. மேலும், மருந்து தயாரிப்பு நிறுத்தப்பட்டு நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் மருந்து ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றார்.

மேலும், ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் இருமல் மருந்து தமிழகம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டது. சர்ச்சைக்குரிய இருமல் மருந்து (Coldrif) அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்தவில்லை. * இருமல் மருந்து விவகாரத்தில் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இருமல் மருந்து பறிமுதல் செய்யப்பட்டு நிறுவன உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சர்ச்சைக்குரிய மருந்து நல்லது என மத்திய பிரதேச அரசு சான்றிதழ் அளித்துள்ளது.
மருந்து உற்பத்தி நிறுவனங்கள், உற்பத்தியை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 25 குழந்தைகள் பலியான காரணமாக ஸ்ரீசன் பார்மா மருந்து நிறுவனத்திற்கு அ.தி.மு.க. ஆட்சியில்தான் உரிமம் வழங்கப்பட்டது என்றவர், கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்ட 2011-ம் ஆண்டில் இருந்து ஒருமுறை கூட மத்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆய்வு செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.
கடந்த 2019 முதல் 2022-ம் ஆண்டு வரை 5 முறை மாநில அரசின் மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆய்வு செய்து அபராதமும், உற்பத்தி நிறுத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டது என்றவர், எனினும், கடந்த ஆண்டில் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளாததால் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.