சென்னை: தமிழ்நாடு அரசின் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று எல்லார்க்கும் எல்லாம் என்ற பெயரில்,  பட்ஜெட்டுக்கான ‘லோகோ’ வெளியிடப்பட்டு உள்ளது. இந்த லோகோவை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.  அத்துடன்  2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் நாளை  தாக்கல் செய்கிறார்.

இந்த நிலையில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் பட்ஜெட் லோகோவை வெளியிட்டுள்ளார்.  அதில், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட… என்று பதிவிட்டு லோகோவை அவர் வெளியிட்டுள்ளார்.

ரூ என்ற எழுத்துடன் 2025-26 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை எல்லார்க்கும் எல்லாம் என்று பட்ஜெட் லோகோ வெளியிடப்பட்டுள்ளது.  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தியா ரூபாயின் குறியீடுக்கு பதிலாக ‘ரூ’ இலச்சினை பயன்படுத்தி பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள  பதிவில், ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்கிற வாசகத்துடன் ” சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட” என குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை, கல்விக்கு நிதி வழங்காதது உள்ளிட்ட சர்ச்சைகள் எழுந்து நிலையில் தமிழ்நாடு பட்ஜெட் லோகோவில் தேவநாகிரி எழுத்தான, இந்தியாவின்  ரூபாய்க்கான   ‘₹’ குறியீட்டுக்கு பதிலாக ‘ரூ’ என மாற்றி தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.