பிரேசில்:
கால்பந்து ஜாம்பவான் பீலே புற்றுநோய் பாதிப்பால் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 82.

பிரேசில் நாட்டைச் சேர்ந்தவரும், மூன்று முறை கால்பந்து உலகக்கோப்பையை வென்ற பிரேசில் அணியின் நட்சத்திர வீரருமான பீலே, புற்றுநோயால் நீண்ட நாள்களாக பாதிக்கப்பட்டிருந்தார். நவம்பர் 29ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (டிச. 29) உயிரிழந்தார் என அவரின் குடும்பத்தினரும், ஏஜென்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பின்னர், பீலேவின் மகளான கெலி நாசிமெண்டோ தனது இன்ஸ்டாகிராமில், படுக்கையில் படுத்திருக்கும் பீலேவின் கையை பிடித்தபடி நிற்கும் குடும்பத்தினரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். “நாங்கள் என்னவாக இருக்கிறோமோ அனைத்திற்கும் உங்களுக்கு நன்றி. உங்களை அளவில்லாமல் நேசித்தோம். உங்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.