அர்ஜுனா விருது வென்றவரும் முன்னாள் உலக சாம்பியனுமான குத்துச்சண்டை வீராங்கனை ஸ்வீட்டி பூரா, தனது கணவரும் ஆசிய விளையாட்டுப் போட்டி கபடி வெண்கலப் பதக்கம் வென்றவருமான தீபக் ஹூடாவைத் தாக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் மார்ச் 15 ஆம் தேதி ஹரியானாவின் ஹிசாரில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்குள் நடந்ததாகக் கூறப்படுகிறது.
ஸ்வீட்டியும் தீபக்கும் 2022 இல் திருமணம் செய்து கொண்டனர். தீபக் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தற்போது ரூ. 1 கோடி வரதட்சணை கேட்டு தன்னை துன்புறுத்துவதாக ஹரியானாவின் ஹிசார் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் காவல் நிலையத்தில் பேசிக் கொண்டிருந்தனர்.
ஒரு கட்டத்தில், பேச்சுவார்த்தை முற்றி கைகலப்பானது, ஸ்வீட்டி பூரா ஹூடாவை நோக்கி விரைந்து சென்று, அவரது கழுத்தைப் பிடித்து, அவரைத் தாக்க முயன்றது கேமராவில் பதிவாகியுள்ளது.
பின்னர் குடும்ப உறுப்பினர்கள் தலையிட்டு ஸ்வீட்டி பூராவைத் தடுத்தனர்.
இந்த காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.