பாட்னா
நேற்று பாட்னா பல்கலைக்கழக வளாகத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,

நேற்று பீகாரில் உள்ள பாட்னா பல்கலைக்கழக வளாகத்தில் பொருளாதார துறை பகுதியில் நூலகத்திற்கு வெளியே திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டதால் அந்த பகுதியில் இருந்த மாணவர்கள் அலறியடித்தபடி தப்பியோடினர். மேலும் அந்த நூலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கி விழுந்தன.
அங்கு நின்றிருந்த சொகுசு காரின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. அது சமஸ்கிருத துறையின் பேராசிரியர் லட்சுமி நாராயணன் என்பவரின் கார் ஆகும். குண்டு வெடிப்பு சம்பவத்திற்கான பின்னணி பற்றியும், குண்டுவெடிப்புக்கான காரணம் பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒழுங்கீனத்துடன் நடந்து கொள்ளும் மாணவர்களாலோ அல்லது வரவுள்ள மாணவர் தேர்தலையொட்டியோ இந்த தாக்குதல் நடந்திருக்க கூடும் என பலகலைக்கழக தரப்பில் கூறப்பட்டுள்ளது/
தற்போது அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தடயவியல் அதிகாரிகளும் வந்து குண்டுவெடிப்புக்கு பின்னர் மீதம் கிடைத்தவற்றை சேகரித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.