ட்டாநகர்

பாஜக அருணாசலப்பிரதேசத்தில் தனது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் அருணாசலபிரதேசம், சிக்கிம் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது.

கடந்த ஏப்ரைல் 19 ஆம் தேதி அருணாசலபிரதேசத்தில் மொத்தமுள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது.  இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க. 60 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கியது. காங்கிரஸ் 19 தொகுதிகளில் மட்டுமே வேட்பாளர்களை களமிறக்கியது. தவிர தேசிய மக்கள் கட்சி உள்பட பிற கட்சிகளும் களமிறங்கின.

களத்தில் போட்டி வேட்பாளர்கள் இல்லாததால் முதல்வர் பெமா காண்டு உள்பட 10 பா.ஜ.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். எஞ்சிய 50 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

மாநிலத்த்தில் பெரும்பான்மைக்கு 31 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில் ஆளும் பா.ஜ.க. 46 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றிபெற்று அருணாசலபிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியை தக்கவைத்துள்ளது. தவிர தேசிய மக்கள் கட்சி 5 தொகுதிகளையும்  பிற கட்சிகள் 8 தொகுதிகளையும் காங்கிரஸ் ஒரு தொகுதியையும் கைப்பற்றின.

எனவே அருணாசலபிரதேசத்தில் 46 தொகுதிகளை கைப்பற்றி பா.ஜ.க. பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநில முதல்வரான பெமா காண்டு மீண்டும் பதவியேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.