சென்னை

த்திய பாஜக அரசு நாட்டின் பொருளாதாரத்தைப் படுகுழியில் தள்ளி விட்டதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

நேற்று சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனுக்கு அகில இந்திய காங்கிரஸ் ஆராய்ச்சித் துறைத் தலைவரும், தேசிய செய்தித் தொடர்பாளருமான ராஜீவ் கவுடா வந்தார். அவருக்கு மாநில துணை தலைவர் கோபண்ணா, தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, ஜெயக்குமார் எம்பி, மாநில பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகரன், முத்தழகன், அடையார் துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ராஜீவ் கவுடா செய்தியாளர்களிடம்,

“பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இந்த 9 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் மத்திய அரசு தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால், நாட்டின் பொருளாதாரம் படுகுழியில் தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் விலைவாசி உயர்வும், வேலையின்மையும் ராக்கெட் வேகத்தில் அதிகரித்து இருக்கிறது.

ஏழைகளின் கூலி குறைந்துள்ள நிலையில், வேலையின்மையும் 30-40 சதவீதம் அதிகரித்துள்ளது.  பிரதமர் மோடி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கையால் சிறு தொழில்கள் அழிந்தன. மோடியின் விவசாயத்தைத் தாரை வார்க்கும் முயற்சி விவசாயிகளின் மாபெரும் போராட்டத்தால் முறியடிக்கப்பட்டது.

அவர் பெண்கள், தலித்துகள், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து மவுனம் காக்கிறார். பாஜக கடந்த 9 ஆண்டுகளில், எதிர்க்கட்சிகள் மற்றும் தலைவர்களைப் பழிவாங்கும் அரசியலைத் தான் செய்கிறது.

அருணாச்சல பிரதேசம், கோவா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை மிருக பலத்தையும், பண பலத்தையும் பயன்படுத்திக் கவிழ்த்துவிட்டனர்”

எனத் தெரிவித்துள்ள்ளார்.