சென்னை

ரும் 27 ஆம் தேதிக்குள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழை அளிக்க அரசு உத்தரவு இட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.  இடையில் ஒரு சில வகுப்புக்கள் தொடங்கிய பிறகும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மீண்டும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  முதல் கட்டமாக 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

இதையொட்டி பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.  மேலும் அதற்கான சான்றிதழை வரும் 27 ஆம் தேதிக்குள் அவர்கள் அளிக்க வேண்டும் எனவும் பள்ளிகள் சுத்தம் செய்யும் பணி 31 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.