டாக்கா

ங்கதேச உச்சநீதிமன்றத்தை போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்ததால் தலமை நீதிபதி ராஜினாமா செய்துள்ளார்.

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக நடைபெற்ற மாணவர்கள் போராட்டம் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசுக்கு எதிராக திரும்பியது. எனவே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு இடைக்கால அரசு அமைக்கப்பட்டு நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனிஸ் வங்காளதேச இடைக்கால அரசின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாணவர் அமைப்புகள் வங்கதேச உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் அவாமி லீக் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டவர் என குற்றஞ்சாட்டின. புதிய இடைக்கால அரசு சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கலாம் என தகவல்கள் பரவியதால் தலைமை நீதிபதி பதவி விலக வேண்டும் இல்லையென்றால் அவரது வீட்டை சூறையாடுவோம் என்றும் போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் உச்சநீதிமன்றத்தை முற்றுகையிட்டு ஒருமணி நேரத்தில் தலைமை நீதிபதி ஹசன் பதவி விலக வேண்டுமென எச்சரிக்கை விடுத்தனர் எனவே உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி ஹசன் தனது பதவியை ராஜினாமா செய்து தனது பதவி விலகல் கடிதத்தை சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தார். ஹசன் நாட்டின் நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தலைமை நீதிபதி பதவில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.