டெல்லி

காஷ்மீர் பாரமுல்லா தொகுதியில் வெற்ற் பெற்ற சிறைவாசியான சுயேச்சை எம் பி யின் இடைக்கால ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அப்துல் ஷேக் ரஷீத், என்ற இன்ஜினியர் ரஷீத் பயங்கரவாத அமைப்பிற்கு நிதி திரட்டியதாக 2016-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போதைய நாடளுமன்றத் தேர்தலில் இவர் காஷ்மீரின் பாராமுல்லா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான ஒமர் அப்துல்லாவை 2 லட்சத்து 4 ஆயிரத்து 528 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்

தமக்கு நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்கும் வகையில் இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என இஞ்சினீயர் ரசீத் சார்பில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி சந்தர்ஜித்சிங் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி பதில் மனு அளிக்க உத்தரவிட்டு ரசீத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.